என்னைப் பற்றி

எனது படம்
121, அண்ணாநகர், தெரு.4, பொன்னம்மாபேட்டை, சேலம்.636001. அலைபேசி எண் - 98426 82566 & 90924 53376

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

மாரியம்மன் கோயில் வரலாறு




பத்மசாலியரும்
செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயில் வரலாறு

            ஒரு காலத்தில் மாமன் மச்சான் போடா (போடகல) குடும்பத்தாரும் காஜூல (கடாரி) குடும்பத்தாரும் இருவரும் வீட்டுச்சாமான் வாங்க செவ்வாய்பேட்டை சந்தைக்கு செல்வது வழக்கம். ஒருநாள் செல்லும் வழியில் ஒரு கல் கால் இடரி விட்டது . அலட்சியமாக சென்றுவிட்டார்கள். மற்றொறுமுறை பயணம் செய்யும்போது, அதேகல் அவர்கள் காலை இடரிவிட்டது. அன்று இரவு, அவர்கள் கனவில் ' நான் தான் மாரியம்மன் ' என்னை நீங்கள் கண்டுகொள்ளவில்லை , எனக்கு கோயில் கட்டும்படி அசரியாக சொன்னது. அடுத்து வழக்கம்போல் , அவ்விருவரும் சந்தைக்கு சென்றார்கள் . அதேஇடத்தில் அந்த கல் இருந்ததை கண்டு , கல்லை கூடையில் வைத்து சுமந்துவந்தார்கள். பாரம் தாளாமல் அந்தகல் கீழேவிழ , கல் படுக்கை வசமாக விழாமல் , செங்குத்தாக நட்டிநின்றது. இந்த மகிமை உணர்ந்து அந்த இடத்திலே கல்லை நிலைபெற செய்தார்கள். அங்குள்ள முள்புதர்களை சுத்தம் செய்து, அங்கு வழிபாடுசெய்ய வசதிசெய்து கொடுத்தார்கள் .இந்த இடம்தான் இன்று நாம் அனைவரும் வணங்கும் மாரியம்மன் கோயில் ஆகும்.

            இன்றும் நடைமுறையில் உள்ள மரியாதை. ஆடிமாத மாரியம்மன் திருவிழாவுக்கு முன் காஜூல (கடாரி) குடும்பம் பிள்ளைவீடாக , மேளதாளத்துடன் வந்து மரியாதை செலுத்திவருகிறார்கள்.

            அதேபோல போடா (போடகல)  குடும்பம் வீட்டுக்கும் மரியாதையுடன் சென்று, தாலியுடன் இருவீட்டாரும் இணைந்து சென்று மாரியம்மன் கோயில் அடைந்து விழா துவக்குவார்கள். இந்த விழா அரிசிபாளையம் தவிர்த்து மற்ற ஏழு ஊர் மக்களும் கூடி விழா சிறப்பாக நடத்துவார்கள்.

தகவல் – அரிசிபாளையம் , போடா.சென்னகிருஷ்ணன் ,

தேவஸ்தான தலைவர் – 1999.

            கடாரி. சென்றாயசெட்டி பிள்ளை வீடாக கௌரவிக்கப்பட்டார். அவர்கள் தேவாங்கர் தெரு ஆரம்பத்தில் சொந்த வீட்டில் குடியிருந்தார். அவருக்கு ஆண் சந்ததி இல்லாமல் போனது. அவர் பங்காளி முறையில் சீனிவாசன் & மாணிக்கம்  சகோதரர்களுக்கு மரியாதையை மாற்றிகொடுத்தார். அவர்கள் இயலாமையால் , கடாரி. ராமு அங்காளிக்கு விட்டுக் கொடுத்தார். அவர் அரிசிபாளயத்தில் குடியிருப்பவர் . மேற்படி திருவிழாவுக்கு கலந்து கொள்ள முறணாக உள்ளது. அவரும் அவரைசார்ந்த அங்காளி குடும்பம் கடாரி . கோவிந்தராஜ் & கிருஷ்ணாராஜ் சகோதரர்களுக்கு அவர்களுக்கு தாரை வார்த்து ஒப்புக்கொண்டார். இன்றய நிலையில் , மேற்படி அங்காளிகள் இணைந்து மாரியம்மன் திருவிழாவிற்க்கு உற்சவதார்கள் ஆகிறார்கள்.

            கடாரி .கோவிந்தராஜ் & கிருஷ்ணாராஜ் குடும்பத்தார்கள் அசல் வைணவ சம்பிரதாயத்தை பின் பற்றுபவர்கள். இவர்கள் சென்னகிருஷ்ண செட்டி தெரு  முடிவில்  குடியிருக்கிறார்கள்.  கடாரி. சென்றாயசெட்டி அவர்கள் வைணவம் சைவம்  சம்பிரதாயத்தை இணைந்து செயல்படுபவர். இதுவிசயமாக  பாவநாராயண சுவாமி தேவஸ்தான நிர்வாகத்தில் நீண்டகாமாக வைணவ சமய பூஜைவிசயமாக வாக்குவாதம் பஞ்சாயத்து நடந்துள்ளது. அவர்அவர்கள்  நிர்வாக காலங்களிலும் பூஜைகள் மாற்றம் உண்டு.


கோட்டை மாரியம்மன் கோவில்

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டை சேர்ந்த சிற்றரசர்கள்  ஆண்ட காலத்தில் இப்போதுள்ள கோட்டை இடத்தில் கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் திருக்கோவிலையும்  ஒரு பெருமாள் கோவிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன் கோவிலை கோட்டை வீரர்கள் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். இந்த கோட்டைக்குள் இருந்த அம்மனை , திருமணி முத்தாற்றில் அருகில் சேலம், கணக்கர் தெருவில் இருக்கும் கனகசபை முதலியார் ,சிவசங்கர முதலியார் ஆகியோர் இப்போதிருக்கும் இடத்திர்க்கு இட மாற்றம் செய்து கோவில் அமைத்து கும்பாபிசேகம் செய்தார்கள்.



பண்டைய தமிழகம் பல்வேறு மண்டலங்களாக் பிரித்து ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு அமைந்த மண்டலம் கொங்கு மண்டலம் ஒன்று. தற்போதுள்ள சேலம், நாமக்கல்,தருமபுரி,ஈரோடு,கோவை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது கொங்கு நாடு. மலை வளமும் மனவளமும் நிறைந்த நாடு. புலவரும், புரவலரும் சிறந்த நாடு. இதன் கீழ் திசையில் புகழ்நிறைந்த பகுதியே சேலம் மாநகரம் ஆகும்.



கோட்டை மாரியம்மன் கோவில் , சீலம் (மலை) சேர் சேலம் நகரில் திருமணி முத்தாறு கரையில்  உள்ளது.  தமிழ் நாட்டிலேயே சிறிய கருவறை  உள்ள மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு கம்பம் நட்ட பிறகே மற்ற மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்படுகிறது. சித்திரை , மார்கழி ஆகிய மாதங்களில் கதிரவன்  ஒளி கோட்டை மாரியம்மன் மீது படும்.



ராஜகோபுரம் – 81 அடி உயரமும்,42அடி 8 இஞ்ச் நீளமும் 30அடி அகலமும் கொண்ட ராஜகோபுரம் 1-7-1993ல் குடமுழுக்கு செய்யப்பட்டது.



1.சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன்,2.அம்மாபேட்டை, 3.செவ்வாய்பேட்டை, 4.சஞ்சீவிராயன் பேட்டை, 5.சின்னகடை வீதி( இராஜகோபுரம் கிடையாது), 6.குகை, 7.அன்னதானப்பட்டி, 8.பொன்னம்மாபேட்டை ஆக 8 மாரியம்மன் கோவில்களில் பெரியவள்.தலைமையாக விளங்குகிறது.எட்டு பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்பு பெயரும் உண்டு.



அபிசேகம் செய்த நறுமணப் பொருட்கள் கலந்த வேம்பு தீர்த்தம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆடிப் பெருக்கை யொட்டி அம்மனுக்கு சீர்வரிசை பொருட்கள்  கோட்டை பெருமாள் கோவில் சார்பில் வழங்கப்படும்.  மாரியம்மன்க்கு அழகிரிநாத  பெருமாள்  'அண்ணன்' என்ற முறையில் திருமண சீர்வரிசை பொருள்களாக சேலை ,வளையல்கள் ,மங்கல நாண் ,காதோலை ,கருமணி ,மஞ்சள், குங்குமம் ,திருக்கல்யாண மலர் மாலைகள் ,பழங்கள் வழங்கப்படுகிறது.



மண் உறு சாத்துதல் – நேர்த்தி கடனாக பொம்மை உருவங்களை தம் தலைமீது வைத்துக்கொண்டு திருக்கோவிலை மூன்று முறை வலம் வந்து பலிபீடத்தின் அருகில் வைப்பார்கள். இதன் பொருள் தமக்கு நலம் அளித்ததற்கு தம்மையே அம்மனுக்கு ஒப்படைப்பு செய்து விட்டதற்க்கு ஒப்பாகும்.



தர்ம சத்திரத்தை கட்டிக்கொடுத்த தம்பதிகள் – தங்குவதற்க்கு இடவசதி இல்லாமல் அவதிபடும் பக்தர்களுக்கு சேலம் முத்துகுமாரபிள்ளையும் பட்டாக்காரர் பார்வதி அம்மாளும் இவர்களின் மகன் மதுரைபிள்ளை ஆகியோர் தங்கள் சொந்த செலவில் இலவசமாக தங்குவதற்க்கு என்று 1876 தாது வருடம் சித்திரை மாதம் ஒரு தர்ம சத்திரத்தை கட்டி கொடுத்தார்கள். இன்று அது அலுவலகமாக செயல்பட்டுகிறது. பக்தர்களுக்கு பொங்கும் மண்டபம் – 1881 ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் விசு ஆண்டு கார்த்திகை திங்கள் சேலத்தைச் சேர்ந்த தாயம்மாள் என்பவர் கோவில் வடபுறம் அமைத்து கொடுத்துள்ளார்.



சேலம், குகை என்னும் பெயர் வர காரணம்


அருள்மிகு ஆதிமுனீஸ்வரர் கோவில் கட்டியுள்ள இடத்தில் ஒரு குகை இருந்தது. அந்த குகையின் மவுன சாமியார் என்னும் சாது ஒருவர் தங்கி தவம் செய்து வந்தார். அந்த பகுதியை சுற்றியே முதலில் குடியிருப்புகள் தோன்றின. அங்குள்ள மக்கள் அவரை பயபக்தியுடன் வணங்கி வந்தனர். வைகாசி மாத்த்தில் ஒரு நாள் அந்த முனிவர் மறைந்துவிட்டார். அதன்பின் அவர் வாழ்ந்து வந்த குகையை மூடி அந்த இடத்தின்மீது முனிவர் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி வணங்கி வருகிறார்கள்.



செவ்வாய்பேட்டை மாரியம்மன்

இக்கோவிலின் சிறப்பு குதிரையை சாமியாக நினைத்து வணங்கி மீனாட்சி சுந்தரேசன் கோவில் சக்தி அழைப்பு பூஜையுடன் தொடங்கி கபிலர் தெரு வழியாக குதிரையை ஊர்வலமாக அழைத்து வந்து மாரியம்மன் கோவிலை 3 மூறை சுற்றி வரும்.



அன்னதானபட்டி


எந்த ஊரில் இல்லாத செருப்படி திருவிழா நடைபெறும். அன்றய தினம் வேண்டுவோரின்  தட்டில் செருப்பு , விளக்குமாறு, முறம், வேப்பந்தழை ஆகியவற்றை வைத்து பக்தர்கள் தாங்களே வந்து காணிக்கை செலுத்துபவர்கள் 3 முறை சிரசில் நீவிவிட்டு  திருநீறு அணிவிப்பார்கள்.



காந்தி மைதான்

  
இந்த கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் எந்த கோவிலிலும் இல்லாத இரண்டு சிலைகள் உண்டு.

 தகவல் – மாலை மலர் -2014 , மலர் –கோட்டை மாரியம்மன் மகிமை

கோவில் வெப்சைட்www.salemkottaimariamman.tinfo.in
                                   salemkottaimariamman@gmail.com



ஞாயிறு, 1 ஜனவரி, 2017

பாவநாராயண சுவாமி தேவஸ்தானம் வரலாறு

நிர்வாகம்
போடகல குடும்பம் – செவ்வாய்பேட்டை தேர்நிலையம் தென்புறம் சாலிய வெங்கடகிருஷ்ணசெட்டி தெரு , ஆரியவைஸ்ய பிளைளையார் கோவில் தெரு,
தாண்டான் தெரு , சென்னகிருஷ்ணசெட்டி தெரு ஆகிய இடங்களில் மிக நெருக்கமாக குடியிருந்து வாழ்ந்துவந்தார்கள்.
மாரியம்மன் கோவில் வரலாறு
ஒருகாலத்தில் மாமன் மச்சான் போடகல – காஜூல (கடாரி) கோத்திர குடும்பத்தார் இருவரும் வீட்டுசாமான் வாங்க செவ்வாய்பேட்டையிலிருந்து கொண்டலாம்பட்டி  சந்தைக்கு செல்வது வழக்கம். ஒருநாள் செல்லும் வழியில் காளியம்மன் கோவில் அருகில் ஒடை உண்டு, அங்கு சுமைதாங்கி இருந்தது. இருவரும் கூடை சுமந்தபடி, சுமை இறக்க சுமைதாங்கியில் இறக்கினார்கள். கூடையில் ஒரு கல் இருந்ததை கண்டு  அலட்சியமாக அந்த இடத்திலேயே கல்லை வழியில் வீசிவிட்டு பயணம் சென்றனர். மற்றொரு முறை பயணம் செய்யும்போது அதேகல் அவர்கள் கால்கள் இடரிவிட்டது. அன்று இரவு அவர்கள் இருவர் கனவிலும்  நான்தான் மாரியம்மாள் என்னை நீங்கள் கண்டுகொள்ளவில்லை, என்னை நட்டிவைத்து கோவில் செய்யும்படி அசரியாக சொன்னது. அடுத்து வழக்கம்போல சந்தைக்கு செல்லும்போது அதே இடத்தில் அந்த கல் இருந்ததை கண்டு சுமந்து வந்தார்கள். பாரம் தாளாமல் அந்தகல் கீழேவிழ கல்படுக்கைவசம் விழாமல் செங்குத்தாக நட்டிநின்றது. இந்த மகிமை உணர்ந்து அந்த இடத்திலேயே நிலைபெற செய்து, அங்குள்ள முள்புதர்களை சுத்தம் செய்து, அங்கு வழிபாடுசெய்ய வசதிசெய்து கொடுத்தனர்.
                                          ¾¸Åø அரிசிபாளையம், போடகல .ராஜகோபால்
பாரம்பரிய பூஜை மரியாதைக்கு உடையவர்கள் –
1.கடாரி.செ.கிருஷ்ணசாமி பாகவதர், s/o. சென்ராயசெட்டி , தேவாங்கர் பிள்ளையார் கோவில் தெரு, செவ்வாய்பேட்டை,சேலம்.2.
2. போடா.தாண்டவசெட்டி , சென்னகிருஷ்ண செட்டி தெரு,செவ்வாய்பேட்டை,சேலம்.2.
சாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் 1852 1863
ஒருநாள் திருநாளை ஒட்டி, குருமூர்த்திகள் பல்லக்கில் ஊர்வலம் வந்தார். ஊர்வலம் பத்மசாலியர்
தெருவழி வந்தது. அப்போது அச்சமூகமக்கள் பலர் ஒன்றுகூடி குருசாமிகள் தங்கள் வீதிவழி பல்லக்கில் போகக்கூடாது என்றும் நடந்து செல்லபோகலாம் என்றும் ஊர்வலத்தை தடுத்த அம்மக்கள்மீது சேலம் சப்கோர்ட்டில் வழக்குதொடுத்தார். வழக்கு 1852ம் ஆண்டிலிருந்து 1863 வரை பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. சென்னை நீதிபதி கனம் ஹார்மன் ஸ்காட்லண்ட் நைட் துறை அவர்கள் தேவாங்க சமூகத்தின் ஜகத்குரு பீடாதிபதி ஓம்சாம்பலிங்கமூர்த்தி சுவாமிகள் பல்லக்கில் எங்கும் போகலாம் என்றும் ஊர்வலத்தைத்தடை செய்தவர்களுக்கு அபராதம் விதித்து மானநஷ்டத் தொகையுடன் செலவுத் தொகையும் கோர்ட் செலவும் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

1973 ம் ஆண்டு பத்மசாலியர் சமூக மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, ஜலகண்டாபுரம்  சமாதி அடைந்து சாம்பலிங்ககுருமூர்த்திகள் அவர்கள் வாரிசுக்கு மன்னிப்பு கேட்டு பாதபூஜை செய்தார்கள்.
( மேற்படி செய்தி சாம்பலிங்க மடம் வெளியிட்ட புத்தகமும், அவர் சமூக வலைதளம் செய்திகள் உண்டு )
இதுவிசயமாக தேவஸ்தான நிர்வாகத்தில் ஆதாரம் தெரிந்துகொள்ளமுடியவில்லை
கோவில் கட்ட  தகரார்  ஏற்பட்டு  பஞ்சாயத்து
பஞ்சாயத்து பத்திரம் பதிவு நெ. 2992 - 15-11-1929

தேதிகள் –
26-04-1925 >  22-07-1928 >  30-09-1929 >  15-11-1929 
பஞ்சாயத்தார்கள்
1.     விஸ்வகர்மா. கணபதி ஆசாரி குமாரன் க.அங்கப்பாசாரி
2.     சௌராஸ்ர பிராமணர். அண்ணான் கோவிந்தராஜ்அய்யர் குமாரன் திருமலை அய்யர்
3.     விஸ்வகர்மா.கரூர்.கோபால்ஆசாரி , குமாரர் வெங்கடராய ஆசாரி
4.     சேனைதலைவர்.வெங்கட்ராம்செட்டி குமாரர் பொன்னுசாமி செட்டியார்
5.     சேனைதலைவர்.ஆறுமுகம்செட்டியார் குமாரர் பொன்னுசாமி செட்டியார்
6.     வைசியர்.அய்யோதிபட்டிணம் பட்டாபிசெட்டியார் குமாரர் முத்துசாமிசெட்டியார்
7.     தேவாங்கம் ஆரப்ப.கொமாரசாமிசெட்டி குமாரர் சந்திரய்யசெட்டி
பரப்பளவு
குடியிருப்பு
கிரயமும் மாற்றங்களும்
பாவநாராயண சுவாமி தேவஸ்தானம்
Longly Road சந்து No.1
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
1,400
1
கும்பாபிசேகம்
1)     15-11-1929
2)     30-09-1929  ல் முதலாவது  நிர்வாக  தேர்தல்
3)     02-5-1974 ல் மூலஸ்தானம் நவீனமுறையில் கருங்கலில் கட்டப்பட்டது 
 & கம்பி கேட்
( முன்நாளில்  மூலஸ்தானம் சாதாரனமாக 4 அடி உயரத்தில் இருந்தது )
ரத்தின விநாயகர் கோவில்
தேர் நிலையம்
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
805
9
1)     1919 முதல் கும்பாபிசேகம்
2)     20-02-1959 ல் நவீன தார்சு கட்டிடம் – கோவில் வாயிலுக்கு இடதுபறம் 2 கடைகள் வலதுபுறம் 2 கடைகளும்  மாடியில் இரண்டு கடையும்
3)     1970 கோவில் உள்பிரகாரத்தில் கிழக்கு புறம் – நவகிரகம் அமைத்தல்
4)     1980 A.ரங்கநாதன் என்பவர்க்கு முதல்தளம் முகப்பில் -  வாடகைக்கு  புதியதாக  கடை
5)     15-11-1998 ல் இரண்டாம் தளத்தில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது
                 – ஸ்டீபன்  வாடகைதாரர்
னிவாச பெருமாள் பஜனை மடம் ,
ஆரியவைஷ்ய பிள்ளையார் கோவில் தெரு
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
449
1
1)       1928 பஞ்சாயத்து  பத்திரபடி
2)       18-08-1945 போடா.கு.பால்சாமி – பிச்சைகாரர்களுக்கு உணவு தர
சாசணம் ரொக்கம்
சீதாராம ஆஞ்சநேய சுவாமி  ததி ஆராதனை சொஸைட்டி (  ஒரு சாரர்  சமூகமக்களின்  )
39, ஆரியவைஸ்ய பிள்ளையார் கோவில் தெரு
செவ்வாய்பேட்டை,சேலம்.2.

276
1
1)       1933 ல் கிரயம் ராமநவமி உற்சவம் – ஆஞ்சநேயர் பூஜைக்காக சாசனம்
2)       21-02-1998 ல் சொத்து விற்பனை முயற்ச்சி – கடாரி.கோவிந்தராஜ்  தலைமை
(தேவஸ்தான மகாசபையில் அம்பலம் – முயற்சி தோல்வி )
3)       2001ல் வாடகைக்கு விடுதல் – சொம்பு. V.பாஸ்கரன்
போடா.சி.முத்தியால் செட்டி – வீடு சாசனம்
21-19, லாங்லி ரோடு , சந்து நெ.1. தென்புறம்
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
243
1
1)     தானம் – 14-09-1933 ல் நவராத்திரி – ஜம்பு சவாரி உற்சவம்
2)     தற்சமயம் குடியிருப்பு 1980 முதல் A.ராமநாதன்
K.K.சென்றாயசெட்டி  &  தாய்மாமன்
(போடா. சி. முத்தியால் செட்டி )  வீடு  தானம்
97, முனியப்பன் கோவில் தெரு
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
728
1
1)வீடு தானம் – 21-01-1928 - சாசணம் – பிச்சைகாரர்களுக்கு உணவுதர
வாடகை விவரம்   1) ராமுடு செட்டி   2) 1988 முதல் நிர்மலா ஹரிஹரன்
வீடு கிரயம்
41-17,ஆரிய வைஷ்ய பிள்ளையார் கோவில் தெரு
(பஜனை மடம் பின் புறம் )
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
699
1
1943 ல் வீடு கிரயம்  >
வாடகை விவரம் –
1)  வண்ணால. கிருஷ்ணசெட்டி
( புதியதாக குடிஅமைந்ததால் கொத்த இன்டி பட்டம் = புதுவீடு )
2)   K.C.சேகர் ( சந்திரசேகர் )  s/o. கிருஷ்ணசெட்டி
3)   1998 ல் சொகுசு மாடி வீடாக மாற்றம்
4)   07-12-2008 மேலும் மாடிவீட்டை விரிவு படுத்தல் & a / c
24-12, லாங்லி ரோடு சந்து, நெ.1 -  தெற்கு
647
1
1)     1955 ல் போடா.ராமசாமி  >  மகன் B.M.R. நாகமாணிக்கம்
2)     2001 ல் தார்சு வீடாக மாற்றம் -  நாகமாணிக்கம்
3)     2007 ல் செலவு தொகைக்கு ஈடாக மாற்றம் - பண்டார.N. சண்முகம்
14, லாங்லி ரோடு சந்து , நெ.1
15, லாங்லி ரோடு சந்து ,  நெ.1
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
1,073
4
வாடகைகள்
1)       A.கிருஷ்ணமூர்த்தி
2)       தேவஸ்தான அர்சகர் P.B. சீனிவாசன்
3)       மே-2004 ல் தார்சு வீடாக மாற்றம் –
தரை தளம் 2ம் மேல் தளம் 2மாக ஆக 4 வாடகை
12-A,சென்னகிருஷ்ண செட்டி தெரு ,
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
750
1
1)     போடா.நாராயணசாமி சாவித்திரி
2)     1973 ல் சரஸ்வதி அம்மாள்
லாங்லி ரோடு சந்து, நெ.3
( சென்னகிருஷ்ணசெட்டி தெரு ,மேற்கு நிலம் பகுதி )
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
J..நடேச முதலியார் வழக்கு –
D.M. கோர்ட் நெ.O.S.216 – 57 ல் தேவஸ்தான நிலம் சுவாதீனம்
சென்னகிருஷ்ண செட்டி தெரு – கிழக்கு நிலம்
சர்வே நெ.- 13, 13 A, &  13B
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
7,287
42
22-07-1928 -  பஞ்சாயத்து  பத்திரபடி
ஆரம்ப நிலை –
1)     பெரிய கவளை கிணறு , விறகு டிப்போ , குடியிருப்புகள் –
பங்காரு அம்மாள், சாயபு வீடு ,பாக்கியம், ராமுடு, அலமேலு அம்மாள்
2)     29-08-2088 ல்  தேவஸ்தான கடைகள் 14 கட்டப்பட்டது , ஆழ்துளை கிணறு
( தேவஸ்தான சொத்து பறிபோதல் )  À¡ÅÉ¡ ¿üÀ½¢ ÁýÈõ
3)     2001 ல்  மன்றம் முதலீடு அற்ற நீண்டகால நிலம் ஒப்பந்தம் + ஆழ்துளை கிணறு
4)     தென்புறம் உள்ள வீடுகள் பாக்கியம்,ராமுடு,அலமேலு ஆக 3 வீடுகள் வடபுறம் மாற்றம்
சென்னகிருஷ்ண செட்டி தெரு - மேற்க்கு நிலம்
லாங்லி ரோடு சந்து, நெ.3
சர்வே நெ.- 13, 13 A, &  13B
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
10
22-07-1928 -  பஞ்சாயத்து  பத்திரபடி
1)     J..நடேச முதலியார் வழக்கு –தேவஸ்தான நிலம் சுவாதீனம் போக மீதி நிலம்
ஆரம்ப நிலை –
2)     விறகு டிப்போ , தேவஸ்தான ஊழியர் குப்புசாமி > சின்னசாமி , பத்மஜோதி வாலிபர் சங்கம்
புஷ்பா, ஜானகிஅம்மாள்,ராஜகோபால்,சக்கரபாணி ( கிருஷ்ணவேணி ) ,

( தேவஸ்தான சொத்து பறிபோதல் )
3)     27-05-2001 ல் சொஸைட்டி முதலீடு அற்ற நீண்டகால நிலம் ஒப்பந்நம்
4)     ஜானகிஅம்மாள், சின்னசாமி ஆகியவர் தேவஸ்தான வாடகைகள் நஷ்டத்தை
உண்டாக்கி ஒப்பந்தம்
5)     ஒப்பந்த நிலத்தில் 8 கடைகள் கட்டப்பட்டது – மீதி நிலம்
6)     05-03-2014 ல் ஒரு பகுதி திலத்தில் 2 குடோன்கள்  கட்டப்பட்டது
3, குணபல ராமசாமி தெரு , அரிசிபாளையம் - தெற்கு
795
1
20-01-1943 ல் கிரயம்
1)     ஆறுமுகம் ஆசிரியர்
2)     08-11-1999 ல் போடகல. பாலாஜி
( பினாமியாக குடியிருப்பு சீலா.மனோகர் – தாய்மாமா ) சொகுசு மாடிவீடு
24-123, கபினி தெரு , அரிசிபாளையம் - வடக்கு
636
1
20-01-1943 ல் கிரயம் + கிணறு
1943 ல் தொந்தா.மு.வீரைய்யசெட்டி  > மகன்  T.V.பழனிசாமி
மொத்த பரப்பளவு சதுர அடிகள்    =
20,366
79